டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

10 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் மீண்டும் நடைபெறும் டெஸ்ட் ஆட்டம்!

பாகிஸ்தான் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம், ராவல்பிண்டியில் இன்று தொடங்கியுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2019, 5:39 am

பாகிஸ்தான் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம், ராவல்பிண்டியில் இன்று தொடங்கியுள்ளது. இதன்மூலம் 10 வருடங்கள் 9 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் ஆட்டம் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பியுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த டெஸ்டில் இடம்பெற்றுள்ள அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் முதல்முறையாகத் தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் ஆட்டத்தை விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் கேப்டன் அஸார் அலி, 75 டெஸ்டுகளில் விளையாடிய போது இதுவரை பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடியதில்லை. 

2009-ல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்ட், தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. மைதானத்துக்கு இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. சமீபகாலமாகத்தான் டி20, ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அங்கு டெஸ்ட்  ஆட்டம் நடைபெறுகிறது. இலங்கை அணி ராவல்பிண்டியிலும் கராச்சியிலும் டெஸ்ட் ஆட்டங்களை விளையாடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.