டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :11 டிசம்பர் 2019, 11:57 am

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக குல்பாதின் நைப் ஒருநாள் கேப்டன் ஆனார். 

31 வயது அஸ்கர் ஆப்கன் கடந்த நான்கு வருடங்களாக ஆப்கானிஸ்தானின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக மூன்று புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஒருநாள் அணிக்கு குல்பாதின் நைப், டெஸ்ட் அணிக்கு ரஹ்மத் ஷா, டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டன்களாக நியமிக்கப்பட்டார்கள். மூன்று கேப்டன்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து ஆட்டங்களிலும் தோற்றதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், அஸ்கர் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக அவர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்கர் ஆப்கன் இதுவரை விளையாடிய 181 சர்வதேச ஆட்டங்களில், 104 ஆட்டங்களில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.