மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

விதிமுறைகளை மீறிய முரளி விஜய்க்கு அபராதம் விதித்த நடுவர்!

நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்ததற்காக முரளி விஜய்க்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 டிசம்பர் 2019, 5:18 am

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கா்நாடக அணி முதல் நாளான திங்கள்கிழமை 259/6 ரன்களை எடுத்தது.

இந்நிலையில் நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்ததற்காக முரளி விஜய்க்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

முதல் நாளின் கடைசிப் பகுதியில் நடுவரின் சில முடிவுகளுக்கு தமிழக வீரர்கள் அதிருப்தி தெரிவித்தார்கள். அஸ்வின் பந்துவீச்சில் பவன் தேஷ்பாண்டேவுக்கு அவுட் கொடுக்க நடுவர் மறுத்துவிட்டார். இதனால் தமிழக வீரர்கள் மிகவும் கடுப்பானார்கள். அனைவரும் ஒன்று கூடி பேசினார்கள். இதில் முரளி விஜய் நடந்துகொண்ட விதம் விதிமுறைகளை மீறியுள்ளதாக நடுவர்கள் கருதினார்கள். இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் டி. வாசு பேட்டியளித்தபோது, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தவேண்டும். இரு பெரிய அணிகள் மோதும் போது சிறிய விஷயங்கள் கூட மாற்றத்தை உண்டு பண்ணும். தொழில்நுட்பமும் நிதி வசதியும் இருக்கும்போது அவற்றை ஏன் பயன்படுத்தக்கூடாது? இதுபோன்ற ஆட்டங்களில் வீரர்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.