மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தில்லி கிரிக்கெட் மைதானம், அருண் ஜேட்லி மைதானம் எனப் பெயர் மாற்றம்!

ஃபெரோஸ் ஷா கோட்லா என்கிற பெயர் கொண்ட தில்லி கிரிக்கெட் மைதானத்தின் பெயர், ஜேட்லியின் நினைவாக

News image
Updated On :27 ஆகஸ்ட் 2019, 12:20 pm

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். மத்திய முன்னாள் அமைச்சரான ஜேட்லி, முன்பு தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். அவரது காலத்தில் தில்லி கிரிக்கெட் நிர்வாகத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அருண் ஜேட்லி மறைவுக்கு பிசிசிஐ, டிஎன்சிஏ உள்பட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஃபெரோஸ் ஷா கோட்லா என்கிற பெயர் கொண்ட தில்லி கிரிக்கெட் மைதானத்தின் பெயர், ஜேட்லியின் நினைவாக அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் என இனி அழைக்கப்படும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தில்லி கிரிக்கெட் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதேபோல கிரிக்கெட் மைதான கேலரி ஒன்றுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியின் பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 அன்று தில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.