குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தோனியிடம் கற்க விரும்புகிறேன்: சிஎஸ்கே-வுக்கு தேர்வான மார்க் உட் பேட்டி

தோனியிடம் இருந்து கற்க விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தேர்வான இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

Raghavendran

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு நட்சத்திரமாக உருவாகி வரும் மார்க் உட், வருகிற ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் டர்ஹாம் நகரைச் சேர்ந்த உட், 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக பந்துவீசி ஜொலித்தார். இவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்கவின் லுங்கி நிகிடி மற்றும் இந்தியாவின் ஷர்துல் தாக்கூர் ஆகிய இளம் வேகப்பந்துவீச்சாளர்களும் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியளிப்பதாக மார்க் உட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். ஐபிஎல் என்றில்லாமல் உலகிலேயே சிறந்த அணியில் இடம்பிடித்து விளையாடுவதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். அவ்வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். 

அதுபோல எனது அணியை வெற்றிபெற வைக்க நான் நிச்சயம் துணை நிற்பேன். அதிலும் மகேந்திர சிங் தோனியுடன் விளையாடுவது மிகச்சிறப்பானதாகும். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஒரு வீரருக்கு கடும் சவால்கள் காத்திருக்கும். அதை எதிர்கொள்ள தனித்திறமை வேண்டும். 

எல்ல நேரங்களும் நமக்கு சாதகமாக அமையாது. அதுபோன்ற கடுமையான சூழ்நிலைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து தோனியின் வழிகாட்டுதல் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தோனி எனது கேப்டனாக இருப்பதன் மூலம் நான் இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இவற்றை சரியாக எதிர்கொள்ளும் நிலை குறித்து அவரின் வழிகாட்டுதல் சிறப்பானது.

மேலும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து ஸ்லோ பால் ரக பந்துவீச்சு முறையை நேர்த்தியாக வீசுவது தொடர்பாக கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.