அந்நியச் செலவானி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிமீறல் காரணமாக அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
ஐபிஎல் 2-ஆவது சீசன் போட்டிகள் பாதுகாப்பு காரணம் கருதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் 4.98 கோடி அமெரிக்க டாலரை பரிமாற்றம் செய்துள்ளது.
4.98 கோடி அமெரிக்க டாலர் என்பது மிகப் பெரிய தொகை என்பதால் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்யக் கூடாது. இந்த விவகாரம் குறித்தான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை 2011-இல் மேற்கொண்டது. சீனிவாசன், பிரசன்ன குமார் உள்ளிட்ட பிசிசிஐயின் உயர் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் இது தொடர்பானவர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, மே 31-ஆம் தேதி விசாரணையை நிறைவு செய்த அமலாக்கத் துறை சீனிவாசன் உள்ளிட்டவர்களுக்கு அபராதம் விதித்தது.
அதன்படி, சீனிவாசன், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலீத் மோடி உட்பட இந்த விவகாரம் தொடர்பானவர்களுக்கு 121 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதில் பிசிசிஐ ரூ.82.66 கோடி, சீனிவாசன் ரூ.11.53 கோடி, லலீத் மோடி ரூ.10.65, முன்னாள் பிசிசிஐ பொருளாளர் பாண்டோவ் ரூ.9.72 கோடி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ட்ராவன்கோர் ரூ.7 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.
இதற்கிடையில், சீனிவாசன் மற்றும் பிரசன்ன குமார் அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, அமலாக்கத் துறையை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணைக்கு வந்து நிறைவடைந்துள்ளது. அதனால், மனுதாரர் இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பக் கூடாது என்றும் நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலையா? போலீஸாா் விசாரணை

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்களைவிட கூடுதலாக 10 சதவீத பெண்கள் வாக்குப் பதிவு
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மகரம்

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு மரண தண்டனை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


