சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அஸ்லான் ஷா கோப்பை: மன்தீப் ஹாட்ரிக்; இந்தியா அபார வெற்றி!

ஹாட்ரிக் கோல்கள் அடித்து இந்திய அணியைப் பெரும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றியுள்ளார் மன்தீப் சிங்.

News image
Updated On :3 மே 2017, 10:47 am

45, 51, 58-வது நிமிடங்களில் கோல்கள். ஹாட்ரிக் கோல்கள் அடித்து இந்திய அணியைப் பெரும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றியுள்ளார் மன்தீப் சிங்.

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதின. உலகளவில் 16-வது இடத்தில் உள்ள ஜப்பான் அணி, 6-வது இடத்தில் உள்ள இந்திய அணிக்குக் கடும் சவாலாக அமைந்தது. 

முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. ஆனால் 43 மற்றும் 45-வது நிமிடங்களில் ஜப்பான் கோல் அடித்து அசத்தலான முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணிக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதன்பிறகு தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய அணியைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றினார் மன்தீப். ஜப்பான் 2-வது கோல் அடித்தவுடன் அடுத்தச் சில நொடிகளில் மன்தீப் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். இதன்பிறகு மீண்டும் ஜப்பான் கோலடித்து முன்னிலை பெற்றது. 

இதையடுத்து கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர்களையும் இந்திய அணி வீணடித்தது. ஆனால் 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார் மன்தீப். இதனால் ஆட்டம் சமனில் முடியும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் போட்டி முடிவடைய மூன்று நிமிடங்கள் இருந்தபோது ஹாட்ரிக் கோல் அடித்தார் மன்தீப் சிங். அவருடைய அபார திறமையால் இந்திய அணி பெரும் நெருக்கடியில் இருந்து மீண்டது.

கடைசியில் 4-3 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.