எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விராட் கோலியை விமரிசனம் செய்த ஆஸி. ஊடகத்துக்கு அமிதாப் பச்சன் பதிலடி!

ஆஸி. ஊடகமான டெய்லி டெலிகிராஃப், விராட் கோலியைக் கடுமையாகச் சாடியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

எழில்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் கோலி - ஸ்மித் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஆஸி. ஊடகமான டெய்லி டெலிகிராஃப், விராட் கோலியைக் கடுமையாகச் சாடியுள்ளது. அதில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் ஆகிவிட்டார். அதிபர் டிரம்ப் போல தனது தோல்விகளுக்கான காரணமாக ஊடகங்களைக் குறை சொல்கிறார்.

விராட் கோலியின் காயத்தை ஸ்மித் கேலி செய்யவில்லை. அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆஸி. அணியிடம் பேசியுள்ளது. ஆனால் கோலி, வார்னர் அவுட் ஆனபோது ஸ்மித் தன்னைக் கிண்டலடித்ததாக எண்ணிக்கொண்டு ஸ்மித்தை அதே பாணியில் கேலி செய்துள்ளார்.  

கோலி இந்தத் தொடரில் மோசமாக விளையாடி வருகிறார். ஆனால் அவர் தொடர்புடைய சர்ச்சைகளால் கிரிக்கெட் ஆன்மா உயிரற்றதாக உள்ளது.

கிரிக்கெட்டில் ஒற்றுமையைப் பாதுகாக்க கேப்டன்கள் முயற்சிக்கவேண்டும். ஆனால் நூறு வருடங்களுக்கு மேலாக விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட்டின் அஸ்திவாரங்களில் ஒன்றை அழிப்பதாக கோலியின் நடவடிக்கைகள் உள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஏமாற்றுபவர்களாகச் சித்தரித்த கோலிக்கு எவ்வித தண்டனையும் ஐசிசியால் அளிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ என யாரும் அவர்மீது கை வைக்கமுடியாது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் சமாதான உடன்படிக்கையை பிசிசிஐ மேற்கொண்டபோதும் கோலி தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெறவில்லை. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா போல கோலியும் எதிரணி மீதும் விளையாட்டின் மீதும் மதிப்பு, மரியாதை இல்லாமல் உள்ளார். இதன்மூலம் அவர் அணியையும் தன்னையும் ஊக்கப்படுத்திக்கொள்கிறார் என்று கடுமையாகச் சாடியுள்ளது.  

இதற்கு அமிதாப் பச்சன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸி. ஊடகம் கோலியை விளையாட்டின் டொனால்ட் டிரம்ப் என்று விமரிசனம் செய்கின்றன. கோலி ஒரு வெற்றியாளர் மற்றும் அதிபர் என்று ஒப்புக்கொண்டதற்காக ஆஸி. ஊடகத்துக்கு நன்றி என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.