இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து ராமச்சந்திர குஹா விலகல்!

பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா விலகியுள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

எழில்

பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா விலகியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும் என்று அறிவித்தது.  இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரும் இடம்பெற்றார்கள். 

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக பிசிசிஐ பொறுப்பில் இருந்து ராமச்சந்திர குஹா விலகியுள்ளார். மேலும் பிசிசிஐ நிர்வாகக் குழுவில் இருந்து தன்னை விடுவிக்கும்படியும் உச்ச நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பிசிசிஐயை சீரமைப்பதற்காக லோதா குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துமாறு கடந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பிசிசிஐக்கு உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க பிசிசிஐ தொடர்ந்து மறுத்து வந்தது. இதையடுத்து பிசிசிஐ நிர்வாகிகளை நீக்குமாறு லோதா குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து லோதா குழுவின் பரிந்துகளை டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் பிசிசிஐ அமல்படுத்தவில்லை. இதையடுத்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை நீக்கிய உச்ச நீதிமன்றம், பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகிகளாக இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டது. பிறகு, புதிய நிர்வாகக் குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். தற்போது அக்குழுவில் இடம்பெற்ற ராமச்சந்திர குஹா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.