15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: சர்ச்சைக்குள்ளான ஹேமா மாலினியின் கருத்து!

பாஜக எம்.பியும், ஹிந்தி நடிகையுமான ஹேமா மாலினி வினேஷ் போகத் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

News image

வினேஷ் போகத், ஹேமா மாலினி

Updated On :7 ஆகஸ்ட் 2024, 12:48 pm

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவிருந்த வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு அவரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவின் சார்பாக 50 கி. எடைப் பிரிவில் மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையாக வினேஷ் போகத் இருந்தார்.

தங்கம் கிடைக்குமென பெரிதும் எதிர்பார்த்திருந்த வினேஷ் போகத்துக்கு இப்படி நிகழ்ந்தது குறித்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் பாஜக எம்பியும் முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி கூறியது சர்சையாகியுள்ளது.

"100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் பெற்றது ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருக்கிறது. சரியான எடையில் வைத்துக்கொள்வது முக்கியமானது. இது அனைவருக்குமான பாடம். விரைவில் 100 கிராம் எடையை குறைப்பாரென எதிர்பார்க்கிறேன். ஆனால், வினேஷ் போகத்துக்கு வாய்ப்பு கிடைக்காது” என ஹேமா மாலினி கூறியுள்ளார்.

இந்தக் கருத்துக்கு ஹேமா மாலினியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.