டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

இங்கிலாந்து வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.

News image
டிம் செய்ஃபெர்ட்- படம் | ஆர்சிபி (எக்ஸ்)
Updated On :22 மே 2025, 11:21 am

DIN

இங்கிலாந்து வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.

தேசிய அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்பவுள்ளார். அவர் நாளை மறுநாள் (மே 24) தாயகம் திரும்பவுள்ளார். அவருக்குப் பதிலாக நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆர்சிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்குப் பதிலாக அணியில் டிம் செய்ஃபர்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேக்கோப் பெத்தேல் தேசிய அணிக்காக விளையாடுவதற்காக நாளை மறுநாள் தாயகம் திரும்பவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்னும் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது. நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி ஹைதராபாதை எதிர்த்து விளையாடுகிறது. அதன் பின், வருகிற மே 27 ஆம் தேதி லக்னௌவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்புகிறார். ஆர்சிபி அணிக்காக அவர் பிளே ஆஃப் போட்டிகளில் இடம்பெறமாட்டார்.

மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள டிம் செய்ஃபெர்ட் இதுவரை 66 டி20 போட்டிகளில் விளையாடி 1,540 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பாக அவர் ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

ஆர்சிபி அணிக்காக ரூ.2 கோடிக்கு டிம் செய்ஃபெர்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.