டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2025, 2:12 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே தோல்வியடைந்ததால், அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சிஎஸ்கே தோல்வியடைந்தது ஒருபுறமிருக்க, சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஜாரா கூறியதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸின் பலத்தை கவனத்தில் கொண்டு எப்போதும் போட்டிக்கான ஆடுகளங்கள் தயாராகும் நிலையில், சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் இல்லை என ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறுவது ஆச்சரியமளிப்பதாக புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஒரு குறையும் கூற முடியாது. தங்களது பலத்துக்கு ஏற்றவாறே சிஎஸ்கே அணிக்கான ஆடுகளம் தயார் செய்யப்படுகிறது. சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என ஃபிளெமிங் கூறுவது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் நிறைய விஷயங்களுக்கு கவனம் கொடுக்கப்பட வேண்டும். ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டினை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறுகிறார்கள். அணியின் மிடில் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும். சிஎஸ்கே அணி வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும். சிஎஸ்கேவில் டாப் ஆர்டர் நன்றாக இருக்கிறது. அவர்கள் சரியாக விளையாடத் தவறும் பட்சத்தில் மிடில் ஆர்டர் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால், சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் அதற்கு முழுவதும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.