டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை; பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறுவதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

News image
எம்.எஸ்.தோனி
Updated On :14 ஏப்ரல் 2025, 1:04 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு மிகப் பெரிய கவலையாக மாறியுள்ளது. காயம் காரணமாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். தோனி மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். ஷிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஃபிளெமிங் கூறியதென்ன?

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னௌவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில், சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துவிடும்.

முக்கியமான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பை எம்.எஸ்.தோனி ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் அணியை வழிநடத்துவது மிகவும் முக்கியம். ஆனால், அவரிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை. அவருடன் இணைந்து அணி வீரர்கள் கடின உழைப்பை வழங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஏற்கனவே இதுபோன்ற சூழல்களில் இருந்துள்ளோம். இந்த சூழலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்ப நிறைய ஆற்றல் தேவைப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.