ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாயும் புலி: தோனியின் வைரல் புகைப்படம்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி கேட்ச் பிடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

News image

படம்: ஐபிஎல்/ எக்ஸ்

Updated On :27 மார்ச் 2024, 9:41 am

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி கேட்ச் பிடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பைகளை பெற்றுத் தந்த எம்.எஸ். தோனி, இந்த முறை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

இந்த முறை வெறும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடுகிறார்.

நேற்றைய போட்டியில் டேரில் மிட்செல் வீசிய பந்தில் விஜய் ஷங்கர் அடித்த பந்தினை கீப்பர் எம்.எஸ்.தோனி பாய்ந்து பிடித்து அவுட்டாக்கினார். இந்த கேட்ச் பிடித்தது புலி பாய்ந்தது போல் இருப்பதாக வரணனையாளர்கள் வர்ணித்தார்கள்.

இந்த கேட்ச்சுக்காக தோனி 2.27 மீ. தூரம் ஸ்ட்ரெட்ச் செய்துள்ளார். இந்தப் படத்தினை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “பழைய தோனி” எனக் குறிப்பிட்டுள்ளது.

42 வயதிலும் இந்தளவுக்கு கேட்ச் பிடிப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை நேற்றைய போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.