ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லி அணியில் மற்றொரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா: பிடிஐ தகவல்

தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா....

News image

தில்லி அணி (கோப்புப் படம்)

Updated On :20 ஏப்ரல் 2022, 12:20 pm

தில்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர் டிம் சைஃபர்ட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் தில்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதன்பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது. தில்லி அணியில் பேட்ரிக் ஃபர்ஹர்ட், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உள்பட ஐந்து பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். செவ்வாய் அன்று நடைபெற்ற கரோனா பரிசோதனையில் ஐவரைத் தவிர தில்லி அணியைச் சேர்ந்த மற்றவர்களுக்கு கரோனா இல்லை என்று தெரியவந்தது. 

இதையடுத்து புணே நகரில் இன்று நடைபெறுவதாக இருந்த தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட தில்லி அணியைச் சேர்ந்த ஐந்து பேரும் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இரு பரிசோதனை முடிவுகளில் கரோனா இல்லை என்று உறுதியான பிறகு அவர்களால் அணியினருடன் இணைந்துகொள்ள முடியும். 

கடந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2-ம் பகுதி ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் தில்லி அணியைச் சேர்ந்த மற்றொரு வெளிநாட்டு வீரரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று காலை தில்லி அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான டிம் சைஃபர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி அணியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தில்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.