தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காணாமல் போன ஆர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர் பிணமாக மீட்பு

கேரளாவில் காணாமல் போன ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகர் ஞாயிற்றுக்கிழமை பிணமாக மீட்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :24 ஜூன் 2018, 10:12 am

கேரளாவில் காணாமல் போன ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகர் ஞாயிற்றுக்கிழமை பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து 2018 நடைபெற்று வரும் இந்த நேரத்தில், அதுவும் மெஸ்ஸியின் பிறந்த தினத்தில் இக்கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து திகழ்கிறது. அங்கு பிரேசில், ஆர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகளின் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.

ஜூன் 21-ஆம் தேதி ஆர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் குரோஷியா, பலம் வாய்ந்த ஆர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

கேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் வசிக்கும் டினு ஜோஸப் என்ற 30 வயது ஆர்ஜென்டினா ரசிகர் ஜூன் 22-ஆம் தேதி முதல் காணாமல் போனார். மேலும், இனி இந்த கால்பந்து உலகக் கோப்பையில் நான் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன், இதற்கு யாரும் காரணமில்லை என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், 2 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பின்னர் டினு ஜோஸப்-இன் உடல் கோட்டயத்தில் உள்ள இல்லிக்கல் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.