வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று (மே 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் மழை காரணமாக 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய வங்கதேசம் 14.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தௌஹித் ஹிரிடாய் 33 ரன்களும், கேப்டன் லிட்டன் தாஸ் 26 ரன்களும் எடுத்தனர். சைஃப் ஹாசன் 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் கிளார்க்சன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் ஸ்மித் மற்றும் பென் சியர்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் லென்னாக்ஸ் மற்றும் ஈஷ் சோதி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பெவான் ஜேக்கோப்ஸ் அரைசதம்; டி20 தொடரை சமன் செய்த நியூசிலாந்து!
103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 11.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
நியூசிலாந்து அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெவான் ஜேக்கோப்ஸ் அதிகபட்சமாக 31 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் ராபின்சன் 23 ரன்களும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 15 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளையும், மஹேதி ஹாசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
Summary
New Zealand won the third T20 match against Bangladesh by 6 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?

லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ராபின்சன்..! நியூசிலாந்து தடுமாற்றம்!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



