மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரோஹித் சர்மா 2.0 ஆதிக்கம் செலுத்த தயார்: அனில் கும்ப்ளே

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த ரோஹித் சர்மா தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

News image

பந்தை சிக்ஸருக்கு விளாசும் ரோஹித் சர்மா - படம் | AP

Updated On :30 மார்ச் 2026, 12:59 pm

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த ரோஹித் சர்மா தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 38 பந்துகளில் 78 ரன்களும், ரிக்கல்டான் 43 பந்துகளில் 81 ரன்களும் எடுத்தனர்.

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த ரோஹித் சர்மா தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அவரது 2.0 அவதாரத்தில் வந்துள்ளதாகத் தெரிகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவரது அதிரடியான இன்னிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தயார் என்பதைக் காட்டுகிறது. அவர் திடலின் அனைத்துப் புறங்களிலும் ஷாட்டுகளை விளையாடியது இளமைப் பருவ ரோஹித் சர்மாவை எனக்கு நினைவுப்படுத்தியது.

வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் பிளெஸ்ஸிங் முசராபானி ஆகியோரின் பந்துவீச்சில் சிக்ஸர்கள் விளாசுவது அவ்வளவு எளிது கிடையாது. ஆனால், ரோஹித் சர்மா அதனை மிகவும் சாதாரணமாக செய்து காட்டினார். அவரது உடல்தகுதிக்காக அதிகம் உழைத்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அவர் அற்புதமாக விளையாடினார். அவரது அதிரடியான ஆட்டம் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Summary

Former Indian captain Anil Kumble has stated that Rohit Sharma is ready to dominate the ongoing IPL season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.