மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஷ்ரேயாஸ் ஐயர், பில் சால்ட்டை விடுவித்து கேகேஆர் தவறு செய்துவிட்டது: அனில் கும்ப்ளே

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

News image

ஷ்ரேயாஸ் ஐயர் (கோப்புப் படம்) - படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :14 மார்ச் 2026, 12:24 pm

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், அணிகள் அனைத்தும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மூன்றாவது சாம்பியன் பட்டம். கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட் இருவரும் மிக முக்கியப் பங்கு வகித்தனர். ஆனால், அவர்கள் இருவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது.

அணியில் வீரர்களை தக்கவைப்பதில் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக சிறப்பான தெரிவுகள் இல்லை. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து அணி நிர்வாகம் தவறான முடிவை எடுத்துவிட்டது. கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் விடுவிக்கப்பட்டார். அஜிங்கியா ரஹானே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால், அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால், கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்திருந்தால், கொல்கத்தா அணிக்கு அது மிகவும் சாதகமான விஷயமாக இருந்திருக்கும் என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்த அணியை கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Anil Kumble has stated that the Kolkata Knight Riders team management made a mistake by releasing Shreyas Iyer and Phil Salt.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.