நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அவிஷ்கா பெர்னாண்டோ சதம்: இலங்கை ஏ அணி 322 ரன்கள் குவிப்பு!

இலங்கை ஏ அணியின் அபாரமான பேட்டிங் குறித்து...

News image

இலங்கை ஏ அணியினர். - படம்: எக்ஸ் / இலங்கை கிரிக்கெட் வாரியம்.

Updated On :19 ஜூன் 2026, 2:49 pm IST

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 322 ரன்கள் குவித்துள்ளது. இதில் அவிஷ்கா பெர்னாண்டோ சதம் அடித்து அசத்தினார்.

தம்புள்ளாவில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஏ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 65 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரிடூன் தாவூத்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபர்மானுல்லா சாஃபி 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்.

தற்போது பேட்டிங் செய்துவரும் ஆப்கானிஸ்தான் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இம்ரான் மிர்ம் நூர் உல் ரஹ்மான் டக் அவுட்டாகி சொதப்பினார்கள்.

துலாஜ் சமுதித இந்த இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்து இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இதில் வெல்லும் அணி இந்தியா ஏ உடன் இறுதிப் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மோதவிருக்கிறது.

Summary

Avishka Fernando century sri lanka A set a target 323 for afghanistan A

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.