40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நைட் கிளப்பில் அடிதடி... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்! பதவி பறிபோகுமா?

நைட் கிளப் தகராறால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸை பற்றி...

News image

கஸ் அட்கின்சன், பென் ஸ்டோக்ஸ்.

Updated On :9 ஜூன் 2026, 12:48 pm IST

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நைட் கிளப் தகராறால் அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி லார்ட்ஸில் நடைபெற்ற நிலையில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி வருகிற ஜூன் 17 ஆம் தேதி ஓவல் திடலில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸும், வேகப்பந்து வீச்சாளர் கஸ் அகிட்சன் இருவரும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடுவதற்காக அங்குள்ள நைட் கிளப்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு, இங்கிலாந்தின் முன்னணி ரக்பி கிளப்களில் ஒன்றான 'சரசென்ஸ் - Saracens' அணியின் அகாதெமி வீரர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர்களுக்குள் கைகலப்பாக மாறியுள்ளது. அந்த ரக்பி வீரர் அட்கின்சனைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது, அது தவறுதலாக வீரர்களுடன் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரியின் மீது பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அதன்பின் காயமடைந்த அந்த அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், நல்வாய்ப்பாக பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன் இருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “கடந்த திங்கள்கிழமை இரவு விடுதிக்கு ஸ்டோக்ஸ், அகிட்சன் இருவரும் சென்ற போது இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தகவல்களைத் திரட்டி வருகிறோம். அடுத்தப் போட்டிக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 1 - 3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு வீரர்கள் அதிகளவு மது அருந்துவதாகவும், ஒரு வரன்முறையற்று நடந்துகொள்வதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இதனால், இங்கிலாந்து அணி வீரர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத்தொடர்ந்து வீரர்களுக்கு நள்ளிரவு விதி மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை கேப்டன் ஸ்டோக்ஸ் மீறியுள்ளதால், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக ஹாரி புரூக் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Ben Stokes and Gus Atkinson are being investigated after a late-night altercation in London following England's win over New Zealand. The episode has delayed England's second-Test selection and reopened uneasy questions over leadership, discipline and control.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.