ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூன் 6) நியூ சண்டீகரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர் மானவ் சுதரின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார். அறிமுக வீரரான மானவ் சுதர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து, ஃபாலோ ஆன் ஆன ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணியில் செதிக்குல்லா அடல் 42 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 24 ரன்களும் எடுத்தனர். ரஹ்மத் ஷா 13 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் மானவ் சுதர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அறிமுகப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மானவ் சுதருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team achieved a resounding victory by an innings and 300 runs in the Test match against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?

அறிமுகப் போட்டியில் மானவ் சுதர் அசத்தல்; ஆப்கானிஸ்தான் தடுமாற்றம்!

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




