
300-வது சர்வதேச போட்டியில் ஸ்மிருதி மந்தனா அசத்தல்!
இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது 300-வது சர்வதேசப் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ
இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது 300-வது சர்வதேசப் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் திடலில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
3ï¸â£0ï¸â£0ï¸â£ international matches of class & elegance ð
— BCCI Women (@BCCIWomen) July 10, 2026
Congratulations to #TeamIndia vice-captain Smriti Mandhana on a special & monumental milestone ð#ENGvIND pic.twitter.com/r9HnNZZYe0
மதிய உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா களத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 300-வது சர்வதேச போட்டியாகும். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
உணவு இடைவேளையின்போது, ஸ்மிருதி மந்தனா 67 பந்துகளில் 56 ரன்கள எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team vice-captain Smriti Mandhana impressed by scoring a half-century in her 300th international match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







