மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அரையிறுதியில் நியூஸிலாந்து! வெளியேறியது பாகிஸ்தான்..!

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!

News image

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்! - AP

Updated On :28 பிப்ரவரி 2026, 5:17 pm

டி20 உலக கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்தது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய சூப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் இலங்கையை எதிர்த்து களம் கண்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்ட அடுத்து களமிறங்கிய இலங்கையை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால், பாகிஸ்தான் அணியால் மொத்த ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்றதொரு வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் குவித்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

எனினும், இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது. குரூப் 2-இல் பாகிஸ்தான் தோல்வி கண்டதால் நியூஸிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.

Summary

Sri Lanka cross 147 and that's the tournament done for Pakistan. New Zealand qualified for the semis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.