/

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... கே.எல். ராகுல் நிகழ்த்திய புதிய சாதனை!

இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதலிடம் பிடித்த கே.எல். ராகுல் குறித்து...

News image

சதம் அடித்த மகிழ்ச்சியில் கே.எல். ராகுல். - படம்: ஏபி

Updated On :25 ஏப்ரல் 2026, 12:22 pm

இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் கே.எல். ராகுல் அதிக ரன்கள் குவித்தவராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மூன்றாவது அதிகபட்ச ரன்கள் குவித்தவராகவும் 150+ அடித்த முதல் இந்தியராகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 264/2 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 67 பந்துகளில் 152* ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்திய ஆடவர்களில் உள்ளூர், சர்வதேச, ஐபிஎல் போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து கே.எல். ராகுல் அதிகபட்ச ரன்களை அடித்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள்

1. கே.எல். ராகுல் - 152* ரன்கள் (2026)

2. திலக் வர்மா - 151 ரன்கள் (2024)

3. அபிஷேக் சர்மா - 148 ரன்கள் (2025)

4. ஸ்ரேயாஷ் ஐயர் - 147 ரன்கள் (2019)

5. புனித் பிஷத் - 146* ரன்கள் (2021)

ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்தவர்கள்

1. கிறிஸ் கெய்ல் - 175* ரன்கள் (2013)

2. பிரெண்டன் மெக்கல்லம் - 158* ரன்கள் (2008)

3. கே.எல். ராகுல் - 152* ரன்கள் (2026)

4. அபிஷேக் சர்மா - 141 ரன்கள் (2025)

5. குயிண்டன் டி காக் - 140* ரன்கள் (2022)

Summary

KL Rahul becomes Top of Highest individual scores by an Indian in Men’s T20s

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.