ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் குறித்து...

News image

ஸ்பென்சர் ஜான்சன். - படங்கள்: எக்ஸ் / சிஎஸ்கே.

Updated On :21 ஏப்ரல் 2026, 11:57 am

சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் (30 வயது) ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தடைந்தார். இந்தியாவுக்கு வந்த அவர் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸுக்குப் பதிலாக மாற்று வீரராக அதே நாட்டைச் சேர்ந்த ஸ்பென்சர் ஜான்சன் தேர்வாகியுள்ளார். சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடுகிறது.

சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பை வென்றாலும் தோனி கேப்டன்சியில் இருந்து விலகிய பிறகு கடந்த மூன்றாண்டுகளாகத் தடுமாறி வருகிறது. கேப்டன் ருதுராஜ், பயிற்சியாளர் பிளெமிங் செயல்பாடுகள் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

தற்போதைய சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கிறது. அடுத்த போட்டியில் ஏப்.23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வான்கடேவில் மோதுகிறது.

காயத்தில் இருந்த ஸ்பென்சர் ஜான்சன் குணமாகியுள்ளதால், அவர் சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார். அவர் பந்துவீசும் விடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறகுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Summary

Spencer Johnson joined csk team, will be he play against mumbai indians.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.