திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரர் அறிவிக்கப்பட்டது குறித்து...

News image

கிரிஷ் பகத். - படம்: மும்பை இந்தியன்ஸ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:28 am

மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக அதர்வா அங்கோலெகர் (25 வயது) விலகினார். இவருக்குப் பதிலாக, இளம் வேகப் பந்துவீச்சாளர் கிரிஷ் பகத் (21 வயது) மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகள் முதல் போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் அதர்வா அங்கோலெகர் ரஞ்சி கோப்பையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் குணமாகவில்லை; அதனால், இவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் கிரிஷ் கடந்த இரண்டாடுகளாக மும்பை அணியின் வீரர்களின் தேர்வில் இருந்துவருகிறார். வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவரால் பேட்டிங்கிலும் பங்களிப்பை வழங்க முடியும் என்பது கூடுதல் பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு இந்த மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டிஒய் பாட்டீல் டி20 கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார்.

Summary

Young Punjab pacer Bhagat replaces injured Atharva Ankolekar in MI squad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.