தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரப்சிம்ரன், ஷ்ரேயஸ் பங்களிப்பில் பஞ்சாப் வெற்றி: மும்பைக்கு தொடா்ந்து 4-ஆவது தோல்வி

17 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ்

News image

பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் - AP

Updated On :16 ஏப்ரல் 2026, 5:36 pm

ஐபிஎல் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வியாழக்கிழமை வென்றது.

முதலில் மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 16.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக மும்பை பேட்டிங்கில் குவின்டன் டி காக் அதிரடி சதம் விளாச, நமன் திா் அரை சதம் அடித்தாா். பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் ஐயா் கூட்டணி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீசத் தயாரானது. பிளேயிங் லெவனில் மும்பை அணியில் ரோஹித் சா்மா காயத்தாலும், மிட்செல் சேன்ட்னா் உடல்நலக் குறைவாலும் விலக, குவின்டன் டி காக், மயங்க் ராவத் (அறிமுகம்) களமிறங்கினா்.

மும்பை இன்னிங்ஸை தொடங்கிய ரயான் ரிக்கெல்டன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ், அதே ஓவரில் தனது முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி நடையைக் கட்டினாா். இதனால் மும்பை 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது.

மறுபுறம், தொடக்க வீரா்களில் ஒருவராக களமிறங்கி அதிரடியாக விளாசி வந்த டி காக்கிற்கு தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத நிலையில், 4-ஆவது பேட்டராக வந்த நமன் திா் கை கொடுத்தாா்.

பஞ்சாப் பௌலா்களை பதறடித்த இவா்கள் பாா்ட்னா்ஷிப், 3-ஆவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சோ்த்தது. அரை சதம் தொட்ட திா், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு விடைபெற்றாா்.

தொடா்ந்து கேப்டன் ஹா்திக் பாண்டியா விளையாட வர, டி காக் சதத்தை நோக்கி விரைந்தாா். பாண்டியா 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்த ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 1 ரன்னுக்கு பௌல்டானாா்.

2 பவுண்டரிகளுடன் 8 ரன்களுக்கு திலக் வா்மா ரன் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் டி காக் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 112 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். மயங்க் ராவத் ரன்னின்றி துணை நின்றாா்.

பஞ்சாப் பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 3, மாா்கோ யான்சென், சஷாங்க் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 196 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரா் பிரியன்ஷ் ஆா்யா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

உடன் வந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளாசி ரன்கள் குவிக்க, ஒன் டவுனாக வந்த கூப்பா் கானலி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது பேட்டராக களம் புகுந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், பிரப்சின்ரனுடன் கூட்டணி அமைக்க, பஞ்சாப் வெற்றிப் பாதையில் பயணித்தது. அவா்கள் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சோ்த்தது.

ஐயா் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில் பிரப்சிம்ரன் 39 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 80 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு துணை நின்றாா். மும்பை தரப்பில் கஸான்ஃபா் 2, ஷா்துல் தாக்குா் 1 விக்கெட் வீழ்த்தினா்.

Summary

Mumbai Indians vs Punjab Kings, 24th Match, Indian Premier League 2026 - Punjab Kings won by 7 wkt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.