மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதலிடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு!

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நிலவும் போட்டி தொடர்பாக...

News image

ஆர்சிபி வீரர் விராட் கோலி - ராஜஸ்தால் ராயல்ஸ் வீரர்கள் ரவி பிஷ்னோய், துருவ் ஜுரெல்

Updated On :9 ஏப்ரல் 2026, 11:58 am

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் 15-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

குவாஹாட்டியில் நாளை (ஏப்ரல் 10) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் இரண்டு அணிகளும் தோல்வியை சந்திக்காததால், இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் என இரண்டு அணிகளுமே மிகவும் வலுவாக உள்ளன. பெங்களூரு அணியில் விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர். டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, ரோமாரியோ ஷெப்பர்டு என பேட்டிங் வரிசை ஆழமாக உள்ளது.

ஆர்சிபியின் பந்துவீச்சும் மிகவும் வலுவாக உள்ளது. ஜேக்கப் டஃபி, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ரோமோரியோ ஷெப்பர்டு, க்ருணால் பாண்டியா, சூயாஷ் சர்மா என பந்துவீச்சு வரிசையும் வலுவாக உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே வலுவாக உள்ளது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக செயல்படுகின்றனர். கேப்டன் ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

பந்துவீச்சைப் பொருத்தவரையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நண்ட்ரே பர்கர் இருவரும் எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். சந்தீப் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்தி சிறப்பாக பந்துவீசுகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding the battle for the top spot in the IPL points table between the Rajasthan Royals and Royal Challengers Bangalore...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.