திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உலகக் கோப்பைக்காக 4 ஆண்டுகள் காத்திருப்பு... மழையினால் கொந்தளித்த நியூசி. கேப்டன்!

அரையிறுதி வாய்ப்பை இழக்கும்நியூசிலாந்து மகளிரணியின் கேப்டன் பேசியதாவது...

News image
மழையினால் மூடப்பட்ட திடல், சோபியா டிவைன். - படங்கள்: இலங்கை கிரிக்கெட், ஏபி.
Updated On :19 அக்டோபர் 2025, 8:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்து மகளிரணியின் கேப்டன் சோபியா டிவைன் மழையினால் ஆட்டம் கைவிடப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இரண்டு முறையாக நியூசிலாந்து அணியின் போட்டிகள் மழையினால் கைவிடப்பதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன. மழையினால் அந்த அணிக்கும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

நேற்று பாகிஸ்தான், நியூசி. போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இதனால், தெ.ஆ. அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

நியூசிலாந்தின் அரையிறுதிக் கனவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் பேசியதாவது:

உலகக் கோப்பைக்காக நான்கு ஆண்டுகள் காத்திருக்கிறோம். அதிலும் மழை குறுக்கிட்டு மிகப் பெரிய பங்கு வகிப்பது வருத்தமளிக்கிறது.

அடுத்த உலகக் கோப்பையிலாவது இந்தமாதிரி நாள்களுக்கு முன்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

பொதுவாக இங்கு மதிய நேரங்களில்தான் மழை வருகிறது. 10-11 மணிக்கு தொடங்கினால் விளையாட முடியும். அனைத்து அணிகளுமே கிரிக்கெட் விளையாடத்தான் விரும்புகிறார்கள்.

நீண்ட காலமாக காத்திருந்து, சிறந்த அணிக்கு எதிராக விளையாடும்போது மழையினால் தடைபடுவது மிகவும் அவமானகரமானது.

மழை இல்லாமல் இருந்தால் புள்ளிப் பட்டியலில் முன்னேறி இருப்போம் என்றார்.

summary

New Zealand women's captain Sophia Devine said it was "very disappointing" to see the match abandoned due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.