5 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து...
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Tamilvendhan
வங்கதேச அணி ஐந்து மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அயர்லாந்து அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 11) சில்ஹட் சர்வதேச திடலில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்கு முன்பாக வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டும் டெஸ்ட் போட்டியில் மோதியுள்ளன. அந்தப் போட்டியில் வங்கதேச அணி, அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது இரண்டு அணிகளும் தங்களுக்குள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிக் கொள்ளவுள்ளன.
இந்த ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அயர்லாந்து அணி, அந்த அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்ற உத்வேகத்தில் அயர்லாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறது.
கடைசியாக கடந்த ஜூனில் வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The Bangladesh team set to play a Test series after five months.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா? கௌதம் கம்பீர் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது