டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும்.

News image
- படம் | AP
Updated On :3 மார்ச் 2025, 1:47 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

பிளேயிங் லெவனை மாற்ற வேண்டாம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் அரையிறுதிப் போட்டியில் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகவும் அற்புதமாக பந்துவீசினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தியை பிளேயிங் லெவனில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற சரியான முடிவை எடுத்த இந்திய அணி நிர்வாகத்துக்கு முழு மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஏனெனில், வருண் சக்கரவர்த்தி மிடில் ஓவர்களில் நன்றாக விக்கெட் எடுக்கக் கூடியவர்.

வருண் சக்கரவர்த்தியின் அபார திறமையை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள இதுவே சரியான தருணம். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தனர். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வீரர் ஒருவரின் தற்போதைய ஃபார்மை நான் எப்போதும் நம்புவேன்.

வருண் சக்கரவர்த்தி சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது உடல்மொழி மற்றும் தன்னம்பிக்கை அபாரமாக உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அவரது பந்துவீச்சுக்கு எதிராக அதிகம் விளையாடியது கிடையாது.

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.