புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதானம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :28 ஜூன் 2025, 10:51 am

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூன் 28) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான டோனி டி ஸார்ஸி 0 ரன்னும், மேத்யூ ப்ரீட்ஸ்க் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வியான் முல்டர் 17 ரன்கள், டேவிட் பெடிங்ஹம் 0 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர். லுஹான் பிரிடோரியஸ் 44 ரன்களுடனும், டெவால் பிரீவிஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே தரப்பில் தனாகா சிவங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

summary

South Africa were 90 for 4 at the lunch break in the first innings of the first Test against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.