டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அப்படி என்ன வன்மம்? ஆஸி. அணிக்கு எதிராக மிரட்டும் ஷமர் ஜோசப்!

ஆஸி. அணிக்கு எதிராக மிரட்டும் மே.இ.தீ. அணி வீரர் குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமர் ஜோசப். - படம்: ஏபி

Updated On :26 ஜூன் 2025, 7:53 am

ஆஸி. அணிக்கு எதிராக மட்டும் அசத்தலாக பந்துவீசும் மே.இ.தீ. அணி வீரர் ஷமர் ஜோசப் பேசுபொருளாக மாறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆஸி. அணியும் பாரபடோஸ் திடலில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆஸி. 180-க்கு ஆல் அவுட்டானது.

இதில் ஆஸி. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களை குறிவைத்து வீழ்த்தியுள்ளார் ஷமர் ஜோசப்.

டார் ஆர்டர் சாம் கான்ஸ்டாஸ், கவாஜா, கேமரூன் கிரீனை வீழ்த்தினார். அடுத்து மிடில் ஆடர் பியூ வெப்ஸ்டரையும் வீழ்த்தி அசத்தினார்.

டிராவிஸ் ஹெட் விக்கெட்டும் நடுவர் தீர்ப்பினால் தவறியதால் 4 விக்கெட்டுடன் முதல் இன்னிங்ஸை முடித்தார்.

ஆஸி. அணிக்கு எதிராக மட்டுமே இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

மற்ற அணிகளுக்கு எதிராக 11 இன்னிங்ஸில் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆஸி. அணிக்கு எதிராக அப்படி என்ன வன்மமோ என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

ஏற்கெனவே, ஆஸி. மண்ணில் ஒரு இன்னிங்ஸில் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

முதல்நாள் முடிவில் மே.இ.தீ. அணி 57/4 ரன்கள் எடுத்துள்ளது. 25 வயதாகும் ஷமர் ஜோசப் 8 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Summary

Shamar Joseph is built different while playing against Australia, picking up 17 wickets at an average of 15.94 in Tests! insane record against mighty aussies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.