நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல், இந்திய அணி 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்.

News image
ஜஸ்பிரித் பும்ரா- படம் | AP
Updated On :4 ஜனவரி 2025, 4:19 pm

DIN

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உணவு இடைவேளைக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச சிரமப்பட்டார். பின்னர், அவர் பெவிலியன் திரும்பினார். மீண்டும் பந்துவீச வரவில்லை. அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணி தடுமாறும்

இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், மூன்றாம் நாளில் இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற்றாலும் அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லையெனில் வெற்றி பெறுவது கடினம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் 40 ரன்கள் குவித்தால் அணிக்கு 185 ரன்கள் கிடைக்கும். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அந்த ரன்கள் போதுமானதாக இருக்கும். ஆனால், இந்திய அணி வெற்றி பெறுவது பும்ரா எந்த அளவுக்கு முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதை பொறுத்தே அமையும்.

ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், 145 அல்லது 150 ரன்களே போதுமானதாக இருக்கும். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாத பட்சத்தில், 200 ரன்கள் குவித்தாலும் வெற்றி பெறுவதற்கு அந்த ரன்கள் போதுமானதாக இருக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.