டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

டெம்பா பவுமாவிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த், பும்ரா!

தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது...

News image
ஜஸ்ப்ரீத் பும்ரா, டெம்பா பவுமா, ரிஷப் பந்த். - படங்கள்: ஏபி, பிசிசிஐ
Updated On :24 டிசம்பர் 2025, 3:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா தன்னிடம் பும்ரா, ரிஷப் பந்த் மன்னிப்பு கேட்டதாகக் கூறியுள்ளார்.

அதேசமயம் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் இந்தியர்களை அவமதிப்பாகப் பேசியதையும் கண்டித்து பேசியுள்ளார்.

என்ன பிரச்னை?

இந்திய அணியை சொந்த மண்ணில் 2-0 என தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்தத் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமாவை குள்ளமாக இருப்பதால் ’பவுனா’ எனக் கிண்டல் செய்து பேசினார்.

இது சர்ச்சையான நிலையில், தெ.ஆ. அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை மண்டியிடச் செய்வது போன்ற பொருள்படியும்பான ’க்ரோவல்’ எனும் வார்த்தையைக் கூறினார்.

இது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா இஎஸ்பிஎன் கிரிகின்போவின் எழுதியதாவது:

மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த், பும்ரா...

என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். கடைசியில் மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப் பந்த் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள்.

அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் எனக்கு இருட்டாகிவிட்டது. அது என்னவாக இருக்குமென எனது ஊடக மேலாளரிடம் கேட்டேன்.

திடலில் பேசியது அங்கேயே இருக்கும். ஆனால், நீங்கள் பேசியதை மறந்துவிடாதீர்கள். அதை உத்வேகமாக மாற்றிக் கொள்ளலாம். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை என்றார்.

டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடரை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

summary

South Africa captain Temba Bavuma has opened up about the "unsavoury" remarks made during his team's recent tour of India, revealing that he received an apology from Jasprit Bumrah and Rishabh Pant for an offensive comment while acknowledging that Proteas coach Shukri Conrad should have avoided the infamous "grovel" reference.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.