சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் தேவையில்லை: பந்துவீச்சு பயிற்சியாளர்

இந்திய அணியின் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாகவும், அதனை மேலும் சிறப்பாக்க உதவி செய்ய வேண்டும் என நினைப்பதாவுகம் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :14 செப்டம்பர் 2024, 10:40 am

DIN

இந்திய அணியின் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாகவும், அதனை மேலும் சிறப்பாக்க உதவி செய்ய வேண்டும் என நினைப்பதாவுகம் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் ஏற்கனவே தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

சிறப்பாக செயல்படும் இந்திய கிரிக்கெட்

இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது எனவும், இந்திய அணியில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லை எனவும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியில் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியை அதேபோல தொடர்ச்சியாக செயல்பட வைப்பதே எங்களது இலக்காக உள்ளது. அணியில் தரமான மூத்த வீரர்கள் இருப்பது எங்களது அதிர்ஷ்டம். அணியில் உள்ள வீரர்களுக்கு உதவியாக இருந்து, அவர்கள் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்குவதே எங்களது வேலையாக இருக்கும்.

இந்திய அணி வீரர்கள் சிலருடன் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது. வீரர்களிடம் நன்றாக பழகி அவர்களிடம் நட்பாக இருப்பது மிகவும் முக்கியம். வீரர்களின் பலம் என்னவென்று தெரிந்தால்தான், எதிர்வரும் தொடர்களுக்கு அவர்களுக்கான இலக்குகளை அமைக்க முடியும். இந்திய கிரிக்கெட் நிறைய திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது என்றார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மோர்னே மோர்கல் அந்த அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 544 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் 309 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.