பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை; டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ரோஹித் சர்மா!

நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது குறித்து...

News image
ரோஹித் சர்மா- படம் | AP
Updated On :26 அக்டோபர் 2024, 12:14 pm

DIN

நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யாருடைய திறமை மீதும் எந்தவொரு சந்தேகமும் இல்லை எனவும், பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: நான் யாருடைய திறனையும் சந்தேகப் படவில்லை. இந்த டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து நான் அதிகம் பேசப் போவதில்லை. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்கள் மீது கண்டிப்பாக நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும். நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்களில் நம்பிக்கை வைத்து விளையாடியது போல இந்திய அணியும் விளையாட வேண்டும்.

இந்த டெஸ்ட் தொடர் தோல்வி ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல. நியூசிலாந்து அணி வீரர்களை பாராட்டியாக வேண்டும். அவர்கள் எங்களைக் காட்டிலும் சிறப்பாக விளையாடினர். நியூசிலாந்து அணியின் சவால்களுக்கு நாங்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இந்திய அணி பேட்டிங்கில் சரியாக விளையாடி ரன்கள் சேர்க்கவில்லை. போட்டியில் வெற்றி பெற 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். ஆனால், பேட்ஸ்மேன்கள் அதற்கு ஏற்றவாறு ரன்கள் குவிக்க வேண்டும்.

டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களையோ அல்லது பேட்ஸ்மேன்களையோ குறைகூற விரும்பவில்லை. இது அணிக்கு ஏற்பட்ட தோல்வி. இந்திய அணி வான்கடே டெஸ்ட் போட்டியில் தங்களை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.

சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012-13 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.