விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை, நமக்குதான் அவரது ஆதரவு தேவை: ஜஸ்பிரித் பும்ரா
விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை எனவும் , நமக்குதான் அவரது ஆதரவு தேவை எனவும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.


விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை எனவும் , நமக்குதான் அவரது ஆதரவு தேவை எனவும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 30-வது சதம் இதுவாகும்.
விராட் கோலி ஆதரவு தேவை
பெர்த் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற பிறகு, விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை எனவும் , நமக்குதான் அவரது ஆதரவு தேவை எனவும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை. ஆனால், அவரது ஆதரவு நமக்குத் தேவை. அவர் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர். ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலியின் 5-வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறார் என நினைக்கிறேன். அதனால், அவருக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்து மற்ற வீரர்களைக் காட்டிலும் மிகவும் நன்றாக தெரிந்திருக்கும். அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...