திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இதுதான் ஒரே வழி... பும்ராவை எதிர்கொள்ள ஆஸி. வீரர்களுக்கு முன்னாள் வீரர் கொடுத்த அறிவுரை!

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் அறிவுரை வழங்கியுள்ளார்.

News image
ஜஸ்பிரித் பும்ரா- படம் | ANI
Updated On :23 டிசம்பர் 2024, 10:52 am

DIN

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் அடுத்த போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமனில் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற கடைசி இரண்டு போட்டிகள் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறுவது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில், ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் அவருடன் இணைந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற தவறுகின்றனர்.

இதுதான் ஒரே வழி

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அனைவரும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பரவலாக பேசுகிறார்கள். நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர் ஒருவருக்கு எதிராக, அடிக்கடி பவுண்டரிகளை அடிக்க முடியாது. ஏனெனில், அவர் அதிக அளவிலான மோசமான பந்துகளை வீசமாட்டார். பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்கள் தொடர்ச்சியாக ஒன்று, இரண்டு என ரன்கள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவருக்கு எதிராக தடுப்பாட்டத்தை மிகவும் கவனமாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜஸ்பிரித் பும்ராவின் சவால் எளிதாக இருக்கப் போவதில்லை என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.