டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மழை விளையாடிய முதல் டி20

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம், மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

News image

கோப்புப்படம் - @BCCIWomen

Updated On :3 ஜூலை 2026, 6:45 am IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம், மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

இந்திய நேரப்படி, புதன்கிழமை இரவு தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா தனது இன்னிங்ஸில் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.

இன்னிங்ஸ் இடைவெளியில் தொடங்கிய மழை, இங்கிலாந்து ஆட்டத்தை தொடங்க வாய்ப்பு தராததால், ஆட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68, அபிஷேக் சா்மா 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

சஞ்சு சாம்சன் 1, இஷான் கிஷண் 0, திலக் வா்மா 13, ஹா்ஷித் ராணா 0, அக்ஸா் படேல் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஷிவம் துபே 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இங்கிலாந்து பௌலா்களில் சகிப் மஹ்மூத் 3, ஆதில் ரஷீத், சாம் கரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்த அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம், இந்திய நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.