தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்திய பந்துவீச்சாளர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்! 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பர்வீந்தர் அவானாவா மீது மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

News image
Updated On :21 ஜூலை 2017, 1:45 pm

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் வேகப்பந்துவீச்சாளர் பர்வீந்தர் அவானா (31 வயது). இவர் தில்லியைச் சேர்ந்தவர்.

இவர், தில்லி அணிக்காக இதுவரை 62 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். 108 இன்னிங்ஸ்களில் மொத்தம் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுபோல இந்திய ஏ அணிக்காக 44 போட்டிகளில் களம்கண்டு 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பஙகேற்று விளையாடினார்.

மேலும், அடுத்த டி20-யிலும் பங்கேற்றார். மொத்தம் 2 சர்வதேச போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுளளார். ஆனால் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. 

அதுபோல 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் பர்வீந்தர் அவானா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.