சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பீஜிங் ஒலிம்பிக்: 31 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுப்பிடிப்பு

சீன தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது 31 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:18 pm

PTI

லண்டன்: சீன தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது 31 வீரர்கள்  ஊக்க மருந்து பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

12 நாடுகளைச் சேர்ந்த இந்த 31 வீரர்களும், ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டியின் போது ஊக்க மருந்து சோதனைக்காக வீரர்களிடம் பெறப்படும் மாதிரிகள் பாதுகாக்கப்பட்டு வருவது வழக்கம். அதன்படி பீஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது வீரர்களிடமிருந்து பெறப்பட்டு 454 மாதிரிகள் அண்மையில், நவீன அறிவியல் சோதனை மூலம் மறு சோதனை செய்யப்பட்டது.

இதில் 31 மாதிரிகளில், வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாச், ஊக்க மருந்து பயன்படுத்தியவர்கள் எங்கும் ஓடி ஒளிய முடியாது. ஏமாற்றுபவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் என்றார்.

ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அவர்களில் யாரேனும் பதக்கங்கள் வென்றிருந்தால், அவரை பறிமுதல் செய்யப்படும் என ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது சேகரிக்கப்பட்ட 250 ஊக்க மருந்து மாதிரிகளின் மறு சோதனை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.