அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சர்வதேச கால்ந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவில் நீதிபதி முகுல் முத்கல்

சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:16 pm

PTI

புது தில்லி: சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி முகுல் முத்கல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை தடை செய்தார்.

மேலும், தில்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டிகளைக் கண்காணிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நியமனம் குறித்த நேரடியான கடிதம் ஏதும் தனக்கு இதுவரை வரவில்லை. எனினும், சம்மேளனத்தின் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டதாகவும், அந்த பணியை ஏற்றுக் கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.