/

ஜூலை 6-ல் மே.இ. தீவுகள் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி

மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 6 ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்குகிறது.

News image
Updated On :2 ஜூன் 2016, 2:07 pm

புது தில்லி: மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 6 ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஜூலை 6 ஆம் தேதி செயின்ட் கிட்ஸ் செல்லும் இந்திய அணி, இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

ஜூலை 21 ஆம் தேதி ஆண்டிகுவாவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி ஜூலை 30 ஆம் தேதி ஜமைக்காவிலும், மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் தேதி செயிண்ட் லூசியாவிலும், நான்காவது போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதி டிரிணிடாட் மற்றும் டுபாகோவிலும் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.