தென் ஆப்பிரிக்க அணி இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை எல்கரும் ஆம்லாவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் ஆம்லாவின் ஆட்டம், இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று பாடம் கற்பிப்பதுபோல இருந்தது. 38-வது ஓவரில் எல்கரின் விக்கெட்டைப் பறித்தார் அஸ்வின். எல்கர் 37 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு மிகவும் வலுவான தடுப்பாட்டத்தினால் இந்திய அணியினரை சோர்வு கொள்ள வைத்த ஆம்லா, அஸ்வினின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 43 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்தது. பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.