லாகூர் கடாஃபி மைதானத்தில் நேற்று நடந்த பாகிஸ்தான் - ஜிம்பாப்வே போட்டியின்போது மைதானத்துக்கு வெளியே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள 3-வது ஒருநாள் போட்டி ரத்தாகும் வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது.
கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே இடையே 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. முதல் ஆடிய ஜிம்பாப்வே அணி, 268 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி ஆடிக்கொண்டிருந்தபோது இரவு 9 மணி அளவில், மைதானத்தின் வெளியே பலத்த சத்தம் கேட்டது. இது மைதானத்தின் உள்ளே இருந்த அனைவருக்கும் கேட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் சத்தம் கேட்டது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் சொன்னது.
இப்போது இதைப் பற்றிய உண்மை விவரங்கள் வெளிவந்துள்ளன. நேற்று கடாஃபி மைதானத்தின் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்ததாகவும் அதில் ஒரு காவலர் உள்பட இருவர் இறந்து போயிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பெர்வயாஸ் ரஷீத் கூறும்போது, கடாஃபி மைதானத்தின் மீது நடைபெற இருந்த தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி தீரமிக்க காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். கடாஃபி மைதானத்தின் ஒரு கிலோ மீட்டர் அருகே உள்ள கல்மா செளக்கில், ஆட்டோ ரிக்சாவில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததாக லாகூர் தலைமை போலீஸ் ஆமின் வாய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் நாளை நடக்க உள்ள 3-வது ஒருநாள் போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா என்கிற கேள்வி எழுந்தத. ஆனால், இதனால் பாதிப்பு நேராது. 3-வது ஒருநாள் போட்டி கட்டாயம் நடைபெறும். அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டன. 27,000 ரசிகர்கள் கிரிக்கெட் மேட்ச்சைப் பார்க்க வருவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அக்பர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

