டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

டேவிஸ் போட்டி: இரட்டையர் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி!

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:00 am

எழில்

இந்தியா - நியூசிலாந்து இடையே கிறிஸ்ட் சர்ச்சில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் இரண்டாவது நாளன்று நடந்த இரட்டையர் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி 2-1 என முன்னணியில் உள்ளது.

நேற்று நடந்த ஒற்றையர் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி கண்டு 1-1 என சமநிலையில் இருந்தன. இன்று நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியா சார்பாக ரோஹன் பொபன்னா - சகத் மைனேனி ஆகியோரும் நியுசிலாந்து அணி சார்பாக டேனியல்-சிடக் ஆகியோரும் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6-3 7-6 6-3 என்ற நேர் செட்களில் நியூசிலாந்து ஜோடி வெற்றி கண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த வெற்றியினால் நியூசிலாந்து அணி 2-1 என முன்னணியில் உள்ளது. ஞாயிறு அன்று நடைபெறும் இரு ஒற்றையர் போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும், அந்த அணி செப்டம்பரில் நடக்க உள்ள உலக குரூப் பிளே ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.