சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஐபிஎல் சூதாட்டம்: ஆதாரம் இன்றி குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன்: ராஜ் குந்த்ரா வேதனை!

முதல் நாளில் இருந்து முத்கல் கமிட்டியின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். நான் தவறு செய்ததாக ஆதாரம் எதுவும் இல்லாதபோதும் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன்.

News image
Updated On :15 ஜூலை 2015, 10:05 am

ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியும், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்புடைய கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்க வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, முன்னாள் நீதிபதிகள் அசோக் பன், ஆர். ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய மூவர் குழு செவ்வாய்க்கிழமை தண்டனை விவரத்தைத் தெரிவித்தார்கள். ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் லோதாவின் தீர்ப்பு குறித்து ராஜ் குந்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இன்று எனக்குச் சோகமான நாள். என்னுடைய நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு நான் ஒத்துழைத்தபோதும் அது எனக்கு தண்டனையே வாங்கித் தந்துள்ளது. முதல் நாளில் இருந்து முத்கல் கமிட்டியின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். நான் தவறு செய்ததாக ஆதாரம் எதுவும் இல்லாதபோதும் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன்.

என் மீதான ஆதாரத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுப்பேன். அதன்மூலம் எந்தக் காரணத்துக்காக என் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வேன். என் மீதான குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் அணி பாதிக்கப்பட்டுள்ளது தவறு என நினைக்கிறேன் என்றார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.