சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தோனி இல்லாத ஐபிஎல்-லை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை: கவலைப்படும் சுனில் கவாஸ்கர்

தோனிக்கு இப்போது 34 வயது. இன்னும் சில வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்.

Updated On :14 ஜூலை 2015, 12:17 pm

முன்னாள் நீதிபதி லோதா, ஐபிஎல் சூதாட்டப் புகார் தொடர்பாக இன்று தீர்ப்பு கூறியதை அடுத்து சென்னை, ராஜஸ்தான் அணி வீரர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை அணி வீரர்கள் எந்த அணியில் அடுத்த ஐபிஎல்-லில் ஆடுவார்கள் என்று சென்னை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், லோதாவின் தீர்ப்பு குறித்து கவாஸ்கர் கூறும்போது:

தோனிக்கு இப்போது 34 வயது. இன்னும் சில வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார். அதனால் அவர் இல்லாத ஐபிஎல்-ஐ நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சங்கடத்துடன் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால். ஏற்கெனவே 3-4 வீரர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கவலையுடன் இருப்பார்கள். அதேசமயம் மதிப்புமிக்க நீதிபதிகளின் தீர்ப்பை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

அடுத்த ஐபிஎல் ஆரம்பிக்க இன்னும் 8 மாதங்கள் உள்ளன. எனவே 2 புதிய அணிகளைச் சேர்க்க பிசிசிஐக்கு கஷ்டம் எதுவும் இருக்காது. இந்திய கிரிக்கெட்டின் இந்த நிலைமைக்கு ஐபிஎல்-ஐ காரணம் சொல்லமுடியாது. ஐபிஎல்-லால் இந்திய வீரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.